சமூகத் தேவைகள் மற்றும் நடைமுறைத் திறன்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 08 மாணவர்களால் சிறுவர் வியாபாரச் சந்தை நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்கா அன்சார் தலைமையில், செயன்முறை தொழிநுட்பப் பாட ஆசிரியை திருமதி சாமிலாவின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா அப்துல் மலீக் பிரதம அதிதியாகவும், சிரேஷ்ட ஆசிரிய ஆசோசகர் எம்.எம்.எம். ரபீக் கௌரவ அதிதியாகவும், பாடசாலையின் பிரதிகள் மற்றும் உதவி அதிபர்கள் விசேட அதிதிகளாகவும் பங்கேற்றனர்.
மாணவர்களின் சமூகத் தொடர்பாடல் திறனை மேம்படுத்துவதும், குழுப் பண்பாட்டை வளர்த்தலுமாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மேலும், மரக்கறி மற்றும் பழவகைகளை இனங்காணல், தராசு மூலம் அளவிடல், பணப் பரிமாற்றம், ஒத்துழைப்புடன் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற நடைமுறை அனுபவங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, சிறுவர்களின் திறமைகளைப் பாராட்டினர்.













