மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நேற்று (29) இரவு திருக்கல்யான நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
நேற்று காலை கந்தசஸ்டி விரதம் கும்பம் சொரிதலுடன் நிறைபெற்ற நிலையில் நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.
ஒரு மணமகனுக்கும் மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெறுவது போன்று முருகப்பெருமானுக்கும் வள்ளிதெய்வானைக்கு திருமண நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது மணமகனுக்கு திருமண பெட்டிகொண்டுசெல்லும் நிகழ்வு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
நூறுக்கும்மேற்பட்ட பெண்கள் திருமணத்திற்கு தேவையான பெட்டிகளில் ஏந்திவந்ததை தொடர்ந்து ஆலயத்தில் வள்ளிதெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கந்தசஸ்டி பாடலுக்கு 47நாட்டிய மாணவிகள் நடனமாடி முருகப்பெருமானையும் பக்தர்களையும் மகிழ்வித்தனர்.
இதன்போது மாணவர்களும் பயிற்வித்த ஆசிரியரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
















