யாழ்ப்பாணத்தில் இருக்கும் வேளாளர் சாதியை சேர்ந்த தமிழ் மக்கள் தானமாக இரத்தம் வழங்குவதில்லை என சரத் வீரசேகர பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை ஊடக மாநாடு ஒன்றில் முன்வைத்துள்ளார்.
இவ்வாறு தாங்கள் இரத்தம் வழக்கும் போது தங்களுடைய இரத்தம் வேறு சாதி மக்களுக்கும் வழங்கப்படும் என்ற காரணத்தினால், இரத்தம் வழங்க அவர்கள் விரும்புவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான காரணங்களால் யாழில் உள்ள இரத்த வங்கிக்கு அதிகளவான இரத்தத்தை இராணுவமும், பொலிஸாருமே வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.








