உளநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே பரிசோதித்து அவர்களுக்குச் சிகிச்சையளிப்பது தொடர்பான விசேட செயலமர்வொன்று கடந்த (19) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய உளநலப் பிரிவின் ஒருங்கிணைப்பில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில், கல்முனை பிராந்தியத்தில் உள்ள ஆதார வைத்தியசாலை உளநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப மருத்துவப் பராமரிப்புப் பிரிவுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
உளநல விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஆர்.கமல்ராஜ் மற்றும் பிராந்திய உளநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.அருந்திரன் ஆகியோர் இச்செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, உளநலப் பிரச்சினைகளை ஆரம்பத்தில் அடையாளம் காணுதல், சிகிச்சை மேலாண்மை மற்றும் நோயின் தீவிரமடைதலைத் தடுக்கும் நடைமுறைகள் குறித்தும் அதற்கான சிறந்த சிகிச்சை முறைகள் பற்றியும் விளக்கமளித்தனர்.
உளநல சேவையின் தரத்தை மேம்படுத்தி பிராந்திய மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதே இந்த செயலமர்வின் பிரதான நோக்கமாகும்.













