திருகோணமலை சிவன் கோயில் வளவில் பசு ஒன்று கொலை செய்யப்பட்டு இறைச்சிக்காக எடுத்துச் செல்லும்போது மக்கள் கண்டு எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் கொல்லப்பட்ட பசுவின் பாகங்களை வீதியில் வீசிவிட்டு நபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.
இச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மாட்டின் உடற்பாகங்கள் வீதியில் வீசப்பட்டுள்ளதுடன் அறுப்பதற்கு பயன்படுத்தப்படும் கத்தி, கோடாரியையும் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த மாடு களவாடப்பட்டு அறுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.









