கேகாலை மாவட்டத்தில் உள்ள ருவன்வெல்ல – ரத்தகல மற்றும் ஹட்டனில் உள்ள ரொசெல்ல மாணிக்கவத்த பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, ருவன்வெல்ல – ரத்தகல பகுதியில் உள்ள 11 குடும்பங்கள் ரத்தகல முன்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதேபோல், ரொசெல்ல மாணிக்கவத்த பகுதியில் உள்ள 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வெலிஓயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.








