Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிவாரணம் வேண்டி கோரிக்கை வைப்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஒப்பிட்டு மனச்சாட்சியுடன் வைக்கவும் – மட்டு அரசாங்க அதிபர்

நிவாரணம் வேண்டி கோரிக்கை வைப்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஒப்பிட்டு மனச்சாட்சியுடன் வைக்கவும் – மட்டு அரசாங்க அதிபர்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்துக்கான நிவாரண கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் மனசாட்சி கொண்டிருக்க வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கேட்டுக்கொண்டார்.

இன்று (12) வெள்ளிக்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போது,

“இயற்கை அனர்த்தம் யாருக்கும் ஏற்பட்டாலும், தவறான முறையில் பெறப்படும் நிவாரணம் உண்மையில் பயனளிக்காது. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பில் பாதிப்பு குறைவானது. இருப்பினும் எங்களை விடக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர் அவர்களை நினைத்து நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும், என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதுடன் இருவர் உயிரிழந்துள்ளதுடன் எமது மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் வவுனியா மாவட்டத்தில் அனர்த்தத்தால் உயிரிழந்ததுடன் 11 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது டன் 1946 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அனர்த்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா நேற்று மாலை வரை 6 ஆயிரத்து 238 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது அதேவேளை கடந்த கால அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்து முகாம்கள் அல்லது உறவினர் வீடுகளில் தங்கிய இருந்தவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்கப்பட்டது.

கிராம உத்தியோகத்தர்கள் அவர்கள் தொடர்பான விபரங்களை முதலில் சேகரித்து அனுப்பினர் ஆனால் தற்போது அரசாங்கம் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

அதேவேளை பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் தொழில் முயற்சியாளர், சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது அதற்கான கொடுப்பனவுகளும் விரைவாக வழங்கப்படும் என்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் விடுபடக் கூடாது என்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பாவித்து நிவாரணங்களை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதைப் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இயற்கை பாதிப்பு யாருக்கும் ஏற்படும் இருந்தபோதும் பிழையான முறையில் பெறுகின்ற நிவாரணம் பிரயோசனமாக அமையாது எனவே நிவாரணத்துக்கு கோரிக்கை வைப்பவர்கள் மனசாட்சியாக வைக்கவும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிப்பு குறைவு எனவே எங்களை விட மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றனர் அவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து நாங்கள் நன்றி உள்ளவராக இருக்க வேண்டும்.

அனர்த்த நேரத்தில் கிராம உத்தியோகத்தர்கள் ராணுவத்தினர் பொலிசார் அரச உத்தியோகத்தர்கள் உங்களுக்கு உதவி செய்ய உங்களோடு காத்திருந்தனர் எனவே உங்கள் கோரிக்கை நியாயமாக இருந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“120 ரூபாய்க்கு நெல் விற்க சம்மதம் இல்லை”; கமக்காரர்கள் அமைப்பு
காணொளிகள்

“120 ரூபாய்க்கு நெல் விற்க சம்மதம் இல்லை”; கமக்காரர்கள் அமைப்பு

July 8, 2026
நாட்டில் டெங்கு உயிரிழப்புகள் 42 ஆக உயர்வு; 63,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் டெங்கு உயிரிழப்புகள் 42 ஆக உயர்வு; 63,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

July 8, 2026
தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!
செய்திகள்

தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

July 8, 2026
7 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!
செய்திகள்

7 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!

July 8, 2026
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு
செய்திகள்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு

July 8, 2026
தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து!
செய்திகள்

தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து!

July 8, 2026
Next Post
பேஸ்புக் விருந்து என்னும் பெயரில் போதைப்பொருள் பயன்பாடு; 4 யுவதிகள் உட்பட 22 இளைஞர்கள் கைது

பேஸ்புக் விருந்து என்னும் பெயரில் போதைப்பொருள் பயன்பாடு; 4 யுவதிகள் உட்பட 22 இளைஞர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.