Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன ‘மஞ்சள் அனகொண்டா’ கண்டுபிடிப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன ‘மஞ்சள் அனகொண்டா’ கண்டுபிடிப்பு

6 months ago
in செய்திகள்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட ‘மஞ்சள் அனகொண்டா’ குட்டி, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஊர்வன பூங்காவின் பராமரிப்பாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னரே இந்தக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக நாட்டிற்குக் கடத்தி வரப்பட்ட மஞ்சள் அனகொண்டா உட்பட 4 வகையான 6 பாம்புகளைக் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர். இவை கடந்த 2025.09.15 அன்று பராமரிப்பிற்காகத் தெஹிவளை மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைக்கப்பட்டன.

சுமார் ஒரு வயதுடையதும், ஒன்றரை முதல் இரண்டு அடி நீளமானதுமான இந்த அனகொண்டா குட்டி, ஊர்வன பூங்காவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதே காணாமல் போனது. மிருகக்காட்சிசாலையிடம் இருந்த இலங்கையின் ஒரேயொரு மஞ்சள் அனகொண்டா இதுவாகும்.

இது குறித்து கடந்த 7 ஆம் திகதி தெஹிவளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. தவறுதலாகப் பெட்டியின் கதவை மூடாமல் விட்டதால் குட்டி வெளியே சென்றிருக்கலாம் எனப் பராமரிப்பு ஊழியர் தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக ஊழியர்களை ஈடுபடுத்தி மிருகக்காட்சிசாலை முழுவதும் தேடுதல் நடத்திய போதிலும், அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், பராமரிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளை அடுத்து, நேற்று (16) அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார். இத்தகைய பின்னணியிலேயே, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிற்குள் மறைந்திருந்த நிலையில் அனகொண்டா குட்டி இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

June 9, 2026
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
Next Post
சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடனான சந்திப்பு

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடனான சந்திப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.