Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மருந்து மீது இலங்கை குற்றச்சாட்டு; சர்வதேச ஆய்வகப் பரிசோதனையில் நிரூபிக்க கோரும் இந்திய நிறுவனம்

மருந்து மீது இலங்கை குற்றச்சாட்டு; சர்வதேச ஆய்வகப் பரிசோதனையில் நிரூபிக்க கோரும் இந்திய நிறுவனம்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட ‘ஒண்டன்செட்ரோன்’ (Ondansetron) ஊசி மருந்துத் தொகுதிகளை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்பிப் பரிசோதிக்குமாறும், அதற்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்பதாகவும் இந்தியத் தயாரிப்பு நிறுவனமான ‘மான் பார்மாசூட்டிகல்ஸ்’ (Maan Pharmaceuticals) இலங்கை சுகாதார அமைச்சுக்குத் தெரிவித்துள்ளது.

வாந்தி மற்றும் அது சார்ந்த உபாதைகளுக்காக நோயாளர்களுக்கு வழங்கப்படும் இந்த ஊசி மருந்தின் 4 தொகுதிகளை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பயன்பாட்டிலிருந்து நீக்க தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை கடந்த 13ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.

கண்டி தேசிய மருத்துமனையின் நுண்ணுயிரியல் பிரிவு மேற்கொண்ட ஆரம்பகட்ட சோதனையில், இந்த மருந்துகளில் கிருமிகள் அடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததே இதற்குக் காரணமாகும்.

அத்துடன், IDH எனப்படும் கொழும்பு தேசிய தொற்றுநோயியல் தடுப்பு நிறுவகத்தில் அண்மையில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளர்கள் உயிரிழந்தனர்.

அவர்களுக்கான சிகிச்சையின் போது இந்த குறிப்பிட்ட ஊசி மருந்து வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தேசிய ஔடதங்கள் அதிகாரசபையிடம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 37 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணங்களுக்கும் குறித்த ஊசி மருந்துக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இது தொடர்பாகச் சுகாதார அமைச்சுக்குக் கடிதம் எழுதியுள்ள இந்திய உற்பத்தி நிறுவனம், மருந்து மாதிரிகளைச் சர்வதேசப் பரிசோதனைக்கு உட்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பரிசோதனைக்கு அனுப்பப்படும் மருந்து மாதிரிகள் இலங்கையில் உரிய தரம் மற்றும் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன என்பதை உறுதிப்படுத்துவது இலங்கைச் சுகாதாரப் பிரிவினரின் பொறுப்பு என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
Next Post
நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.