“மறு மலர்சிக்காக வாசிப்போம் “என்ற தொணிப் பொருளில் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வான பரிசளிப்பு விழாவும் அதிதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் வாகரை கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வானது சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது நூலகங்கள் வாசிப்பு நிலையங்கள் மற்றும் வாசகர் வட்டம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்ததனர்.
இதன் போது பிரதேச பாடசாலைகளுக்கிடையில் வாசிப்பு தொடர்பாக நடாத்திய பல்வேறு பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலாளர் க. அமலினி பிரதேச சபையின் செயலாளர் T.S P குயின்ரஸ். வைத்தியர் H.M.T.சஜிந்த பொது நூலகத்தின் நூலகர் க.ருத்திரன் வேல் விஷன் முகாமையாளர் அ. ரவீந்திரன் ஆசிரிய ஆலோசகர் ஏ .ஜெயரஞ்சித் ஆகியோர்கள் தவிசாளரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் தவிசாளர் பொது நூலக உத்தியோகத்தவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் மாங்கேணி வாகரை.கதிரவெளி ஆகிய வலய நூலகங்களின் சேவையை பாராட்டி நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
வாகரைப் பிரதேச மாற்றுத்திறனாளி அமைப்பிற்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் நூலக பாவனை வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம். பேச்சு என்பவற்றுடன் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன . குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரதேச செயலாளர் க.அமலினி கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக பிரதேச சபையின் செயலாளர் T.S.P. குயின்ரஸ். சுகாதார வைத்திய அதிகாரி H.M.T.சஜிந்த வாகரை வேல்ட் விஷன் முகாமையாளர் அ.ரவீந்திரன் மற்றும் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எ. ஜெய ரஞ்சித் ஆகியோருடன் கௌரவ அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.














