மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பகுதியில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டி இன்று(10) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
நிந்தவூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தின் போது ஆம்புலன்ஸ் வண்டி பலத்த சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக இதில் பயணித்த எவருக்கும் உயிர் ஆபத்துக்களோ அல்லது பாரிய காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.









