பல்வேறு பிரதேசங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் உட்பட நால்வர் அநுராதபுரம் – ஹபரணை பிரதேசத்தில் வைத்து ஹாரணை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (12) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹாரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹபரனை மற்றும் மின்னேரியா ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 32,35 வயதுடைய இரண்டு பெண்களும் 40,60 வயதுடைய இரண்டு ஆண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் ஹபரணை ,கல்ஓயா மற்றும் ரொட்டவெவ ஆகிய பிரதேசங்களில் நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 123 கிராம் 600 மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நால்வரும் ஹிங்குரன்கொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








