“பட்டிப் பொங்கல் விழா ” நேற்று (17) கிரான் புலி பாய்ந்த கல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கால்நடை அபிவிருத்தி பால் உற்பத்தியாளர்கள் கமநல அமைப்பு மற்றும் புலிபாய்ந்தகல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவித்து, வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதிதிகள் மற்றும் பண்ணையாளர்கள் புதுப்பானையில் புது அரிசி இட்டு பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தனர். கால் நடைகளுக்கு உணவளித்து விசேட பூசைகள் நடைபெறுகின்றது.













சிறந்த பண்ணையாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் உரையாற்றினார்கள்.
கோறளைப்பற்று தெற்கு கால்நடை அபிவிருத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் சுல்பிகான் ஆபுபக்கர் , மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையளர் தெ.ஜெகநாத், விவசாயம் கால்நடை காணி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் கே. திலகநாதன் மற்றும் மாகவலி B. பிராந்திய திட்ட பணிப்பாளர் P.G நோயல் ஜெயசிறி, மகவலி B-திட்ட உதவி பணிப்பாளர் ரி. சசிவதனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கமநல சேவை உத்தியோகஸ்தர்கள், கால்நடை அபிவிருத்தி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் , கிராம உத்தியோகஸ்தர், பால் பண்ணையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.








