Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தர் சிலையின் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியது தொடர்பில் இருவர் கைது

புத்தர் சிலையின் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியது தொடர்பில் இருவர் கைது

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புத்தர் சிலைகளின் நெற்றியில் இருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சந்தேக நபர்களை இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலயங்களில் இருக்கும் புத்தர் சிலைகளின் நெற்றியில் காணப்படும் கலசங்களை இரண்டு சந்தேக நபர்களும் திருடியுள்ளனர்.

இறுதியாக முச்சக்கர வண்டியில் சென்று குறித்த இரண்டு பேரும் நாவலப்பிட்டியிலுள்ள கெட்டபுலாவ ஆலயத்தில் உள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தைத் திருடும் காட்சிகள் ஆலயத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கேமராவில் பதிவாகியதை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

கைதானவர்கள் 45-50 வயதுக்குட்பட்ட பிலிமதலாவ சேர்ந்தவர்களாவர் புத்தர் சிலைகளின் தலைகளை சேதப்படுத்தி இலங்கையில் முழுவதும் உள்ள ஆலயங்களுக்குச் சென்று கலச நினைவுச் சின்னங்களிலிருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உருகிய தங்கம் ஒரு தொகையையும் மீட்டுள்ளனர்.

குறிப்பாக குருநாகல் மற்றும் பிலிமதலாவ பகுதிகளில் தங்கப் பொருட்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தால் இவ் இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கம் உருக்கப்பட்டு விற்கப்பட்டது என்பது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஒன்றினையும் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணையின் பின்னர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
தித்வா புயலால் 103 சிறுவர்களின் தாய், தந்தையர் இறந்துள்ளனர்

தித்வா புயலால் 103 சிறுவர்களின் தாய், தந்தையர் இறந்துள்ளனர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.