முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா சமீபத்தில் வெளியான பேட்டியில், ஏலியர்கள் மற்றும் நெவாடாவில் உள்ள இரகசிய இராணுவ தளம் Area 51 தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் வழங்கியுள்ளார்.
ஏலியர்கள் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அவர் கருதுகிறார், ஆனால் அவர் எப்போதும் ஏலியன்களை பார்த்ததில்லை என்பதையும், இதுவரை அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தப்பட்ட எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் தெளிவாகக் கூறினார்.
பேட்டியில் Area 51 குறித்து கூறும்போது, அங்கு இரகசிய விமானங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் சோதிக்கப்படும் இடமாகும், ஆனால் ஏலியர்கள் அல்லது மறைக்கப்பட்ட ஆவணங்கள் இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

அமேசிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட சில Unidentified Aerial Phenomena (UAP) அறிக்கைகள், சில வானில் காணப்பட்ட பொருட்களின் மூலத்தை விளக்க முடியவில்லை என்பதையே குறிப்பிடுகின்றன, ஆனால் அதுவே ஏலியர்கள் இருப்பதாகக் காட்டாது. சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் மற்றும் வைரல் தலைப்புகள் இந்த உண்மையை அதிகப்படுத்தியதையே ஒபாமா உணர்த்தியுள்ளார். பேட்டியின் போது அவர் “நான் ஜனாதிபதியாக இருந்தபோது முதலில் கேட்க விரும்பிய கேள்வி ‘ஏலியன்கள் எங்கே ?’” என்று காமெடியும் கலந்த ஒரு வகையில் குறிப்பிட்டார்.
அதேசமயம் “அமெரிக்க அதிபரிடமிருந்தே மறைக்கப்பட்டிருந்தால் ‘ஏரியா 51’-ல் ஏலியன்கள் இருப்பதாக நம்பலாம்” என கூறியிருக்கிறார்.








