மட்டக்களப்பு மாவட்டத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நேற்ற (28) முதல் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை காணப்பட்டது.
அரசாங்கம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று அறிவித்திருந்தாலும், மக்கள் அதிகமாக நிலையங்களை நோக்கி திரண்டுள்ளனர். நேற்று இரவும் எரிபொருள் வழங்கும் வாகனங்கள் நிலையங்களுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், இன்று காலை மட்டக்களப்பு பல நிலையங்களில் எரிபொருள் தீர்ந்ததாக கூறப்பட்டதால், பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதுடன், இன்னும் பலர் அதேவரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது.
அதேசமயம் மாதாந்த எரிபொருள் திருத்தத்திற்கு அமைய நேற்று இரவுமுதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.








