மட்டக்களப்பில் டீசலில் ஓடும் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஓடுகின்றது இதனால் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலையால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே இந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலையும் மீறி சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் வாகனங்களுக்கு மண்ணெண்னை வழங்கி வருகின்ற இந்த சட்டவிரோத செயற்பாட்டை கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அரசாங்க அதிபரிடம் ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,








