Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய பிரதமரை சந்திக்க தமிழ் கட்சிகள் தீர்மானம்!

இந்திய பிரதமரை சந்திக்க தமிழ் கட்சிகள் தீர்மானம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்திப்பதற்கான முயற்சியை கூட்டாக மேற்கொள்வதற்கான அழைப்பை விடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்தியப் பிரதமரும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதற்கு இணக்கம் வெளியிடுவார் என சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்., தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் , ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்பது பயனுள்ளதாக இருக்குமா என தாம் யோசனை செய்வதாக இந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத் நடைபெறவுள்ளதால், தம்மை சந்திக்க நரேந்திர மோடி சம்மதிப்பார் என தாம் உறுதியாக நம்புவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பிற்கென புதுடில்லி செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் நரேந்திர மோடி தென்மாநிலங்களுக்குச் செல்லும்போது அவரைச் சந்திக்கலாம் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரானவர் என்ற போதிலும், அரசமைப்பிலுள்ள விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அவர் தற்போதைய தருணத்தில் உணர்ந்துகொள்வார் என நம்புவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தம் தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு இந்தியாவால் மட்டுமே அழுத்தம் கொடுக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்சமயம் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் இல்லாவிட்டால் அரச திணைக்களங்களை எதிர்க்க முடியாது என்பதுடன், சிறிலங்கா படைகளும் பௌத்த தேரர்களும் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமது யோசனை அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டால், அனைவரும் கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஒரு கடித நகலை தாம் தயாரிக்கலாமா என்பதைத் தெரிவிக்குமாறும் சி.வி.விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் அனுமதி கோரியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13ஆவது திருத்தத்தின் பலனை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், கூட்டு நடவடிக்கைக்கு தமது ஒப்புதலைக் காட்டுவதற்காகவேனும் தம்முடன் வர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் யாரும் மோடியைத் தனித்தனியாகச் சந்திப்பதில் பயனில்லை எனக் கூறியுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அனைவரும் ஒப்புதல் அளித்தால் சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்திப்பது தொடர்பான தமது இந்த யோசனை குறித்து மூன்று நாட்களுக்குள் பதிலளிக்குமாறும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களிடம் குறித்த கடிதத்தின் ஊடாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
மனிதரல்லாத இரண்டு உயிரினங்களின் உடல்கள்! ; ஏலியன்களா?

மனிதரல்லாத இரண்டு உயிரினங்களின் உடல்கள்! ; ஏலியன்களா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.