மட்டு மாநகர சபையில் சேவையை பெறச் சென்ற மக்களை நூலக திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி வருகிறார் அதன் பின்னர் வருமாறு தெரிவித்து திருப்பி அனுப்பியுள்ளனர். மாநகர சபை இந்த முடிவை எவ்வாறு எடுத்தது? சபையை கூட்டியா? அல்லது காட்டுச் சட்டமா? தனிநபர் எடுத்த முடிவா? அவரின் நற்பெயரை கெடுப்பதற்காக? என ஈ.பி.டிபி. கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டு பாலைமீன்மடுவில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் 20 ம்திகதி மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி வருகை தந்து திறக்கவுள்ளார் அதனையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
இருந்த போதும் மட்டு மாநகர சபைக்கு 15ம் திகதி வெள்ளிக்கிழமை மக்கள் தமது சேவைகளை பெற சென்ற போது அங்கிருந்த ஒரு சில ஊழியர்கள் ஜனாதிபதி நூலகம் திறப்பு விழாவிற்கு வருகிறார் ஆதலால் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் வெளி வேலைக்கு சென்று விட்டனா.; எனவே எங்களால் எந்த சேவையும் செய்ய முடியாது ஜனாதிபதி நூலக திறப்பு விழாவிற்கு வந்து போன பின்னர் நீங்கள் வருமாறு தெரிவித்து பொது மக்களை திருப்பி அனுப்பினார்கள்
இது தொடர்பாக பொதுமக்கள் எங்களிடம் முறைப்பாடுகளை தெரிவித்து ள்ளனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி கியுபார் முறையில் எரிபொருள் நிரப்பி தங்களுடைய அத்தியாவசிய சேவையை பெற வந்த மக்கள் தமது சேவையை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் ஏக்கத்துடன் வெறும் கையுடன் திரும்பி செல்கின்றனர். இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் *தெரிவிக்கையில்,








