கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் போக்குவரத்து வீதி ஒழுங்கினை மீறிய குற்றச்சாட்டில் 40 அதிகமான மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தின் போது அதிக வேகத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை தலைக்கவசம் இன்மை மற்றும் வீதி விபத்துக்கள் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் உரிமையாளரிடம் குறித்த வாகனங்கள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.








