Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை இந்திய மக்களவை உறுதி செய்தது!

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை இந்திய மக்களவை உறுதி செய்தது!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளில் பல முறை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா இன்று மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு வர கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் நேற்று முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர்.

அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதால், மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை எனும் நிலையில், வாக்கெடுப்பில் இந்த மசோதா பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் ஏகமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 1998-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா காலாவதியானது. கடந்த 1999, 2002, 2003ஆம் ஆண்டுகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் போனது. கடந்த 2008ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

2009ஆம் ஆண்டில் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய, 2010ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 2010ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், அதன் பிறகு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 27 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முன்மொழிகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே இந்த மசோதா அமலுக்கு வரும். மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்த பிறகு 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

தொடர்புடையசெய்திகள்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்
செய்திகள்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்

June 9, 2025
வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு
செய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

June 9, 2025
கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று இணையவேண்டும்; கருணா அம்மான் தெரிவிப்பு
செய்திகள்

கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று இணையவேண்டும்; கருணா அம்மான் தெரிவிப்பு

June 9, 2025
பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்
செய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்

June 9, 2025
பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
செய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

June 9, 2025
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
செய்திகள்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

June 9, 2025
Next Post
அஜித்துக்கு வில்லனாகும் பிக்பாஸ் பிரபலம்!

அஜித்துக்கு வில்லனாகும் பிக்பாஸ் பிரபலம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.