Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

2 months ago
in செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்டு வரும் மனித எச்சங்கள், தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்களாக அமைந்துள்ளன என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், செம்மணி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மனித உடல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தை வெளிக்கொணருவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியமை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்களை அடையாளம் காணும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரவும், அவற்றை ஆவணப்படுத்தவும் பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தனது நடுநிலைத் தன்மையையும் நீதித்தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.