Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலகளவில் கவனம் பெற்றுள்ள ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்படும் நாயை அதன் உரிமையாளர், பொலிஸாரின் அனுமதியுடன் முச்சக்கர வண்டி மூலம் கதிர்காமத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.

தகவல்களின் படி, குறித்த நாயின் உரிமையாளர் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட கதிர்காம பாதயாத்திரையில் பங்கேற்றிருந்தார். பாதயாத்திரை முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளை கடந்து சுமார் 400 கிலோமீற்றர் பயணித்து பாணமையை சென்றடைந்தது.

இந்த நிலையில், பாதயாத்திரை குழுவின் தலைமைப் பொறுப்பாளருக்கும் நாய் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து, அவர் குழுவிலிருந்து விலகி பாணமை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், பாணமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த அவர், ‘சுப்பிரமணியம்’ என பெயரிடப்பட்ட நாய் தாம் வளர்த்து வந்ததாகவும், பாதயாத்திரை முழுவதும் தம்மை பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அந்த நாயை பயன்படுத்தி சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, பொலிஸாரின் அனுமதியுடன் நாயை முச்சக்கர வண்டியில் ஏற்றி இன்று காலை கதிர்காமத்துக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கடந்த நாட்களில் கல்முனை பகுதியில் இந்த நாய் தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தை ஈர்த்தது. அந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, கல்முனையில் இந்த நாய் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரால் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பான சில சமூக ஊடகப் பதிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!
செய்திகள்

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!

July 7, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!

July 7, 2026
வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!
செய்திகள்

வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

July 7, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு

July 7, 2026
கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

July 7, 2026
அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!
செய்திகள்

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!

July 7, 2026
Next Post
மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.