Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (10) அதிகாலை முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நுவரெலியா நகரம், அம்பேவெல, பட்டிப்பொல, ஹக்கல, தலவாக்கலை, லிந்துலை, கொட்டகலை, அக்கரப்பத்தனை உள்ளிட்ட பகுதிகளிலும், ஹட்டன்–கொழும்பு மற்றும் ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதிகளிலும் அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

சில பகுதிகளில் பார்வைத் தூரம் 20 முதல் 30 மீற்றர் வரை மட்டுமே காணப்பட்டதால், பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

பனிமூட்டம் நிலவும் பகுதிகளில் வாகனங்களின் முன்விளக்குகளை ஒளிரச் செய்து, குறைந்த வேகத்தில் பயணிப்பதுடன், எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண தேவையான இடங்களில் ஒளிச் சமிக்ஞைகளைப் பயன்படுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், சாரதிகள் தங்களுக்குரிய பாதையிலேயே பயணித்து, தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், பனிமூட்டம் அதிகமாகக் காணப்படும் இடங்களில் கூடுதல் அவதானத்துடன் வாகனங்களை இயக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டம் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதியாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகளும் போக்குவரத்து பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி பயணிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்
செய்திகள்

யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்

August 25, 2026
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு
செய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026
மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது
செய்திகள்

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது

August 25, 2026
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து
செய்திகள்

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து

August 25, 2026
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

August 25, 2026
சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு
காணொளிகள்

சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு

August 25, 2026
Next Post
‘எல் நினோ’ வலுப்பெற வாய்ப்பு; நீர் முகாமைத்துவத்தில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்!

‘எல் நினோ’ வலுப்பெற வாய்ப்பு; நீர் முகாமைத்துவத்தில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.