மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் மீண்டும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து அமெரிக்கா பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.









