Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் பல்வேறுபட்ட மோசடிகள்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் பல்வேறுபட்ட மோசடிகள்!

2 years ago
in செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 வழக்குகள்
பல்வேறு காரணங்களுக்காக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல்செய்யப்பட்ட18 வழக்குகளில் 11 வழக்குகளுக் குரிய சந்தேகநபர்கள் குற்றமற்றவர்கள் என 2021 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 69 வழக்குகளை தாக்கல்செய்த நிலையில்,
அவற்றில் 40 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாகவும், இது மொத்த வழக்குகளின் எண்ணிக்கையில் 58 சதவீதமாகும் என்றும் கணக்காய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், குறித்த ஆணைக்குழுவின் சட்டப்பிரிவில் 1508 தீர்வு காணப்படாத கோப்புகள் இருப்பதாகவும் அவற்றில் 489 கோப்புகள் ஐந்தாண்டுகளுக்கு மேலாக தீர்வு காணப்படாமல் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிவரை 926 கோப்புகள் நிலுவையில் உள்ளதாகவும், அது குறித்த
அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள 27 பணிகளில் 11 பணிகள் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் 36 சிரேஷ்ட நிலை வெற்றிடங்கள், 203 மூன்றாம் நிலை வெற்றிடங்கள், 158 இரண்டாம் நிலை வெற்றிடங்கள், 56 ஆரம்ப நிலை வெற்றிடங்கள் மற்றும் 15 புலனாய்வு பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்
செய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்

June 15, 2025
நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

June 15, 2025
பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

June 15, 2025
முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு

June 15, 2025
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி
அரசியல்

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி

June 15, 2025
மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
Next Post
மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை; தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை!

மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை; தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.