2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் பாடநெறி விரிவுரைகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் பரீட்சை வினாக்கள் தொடர்பான விளம்பரங்களை மேற்கொள்ளுதல் ஆகியனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.







