மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் (Happy Kids) பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் (Singing Fish) முற்றலில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கௌரவமாக வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசியக் கீதம் இசைக்கப்பட்டு விழா உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக Dr. ஏஞ்சலா அருள்ப்பிரகாசம் அந்தோனி (Dr. Angela Arulpragasam Anthony), Dr. கிளாடியா ரத்வத்தே ஜெயரூபன் (Dr. Mrs. Claudia Rathu Jeuaruban) மற்றும் திருமதி ஸ்வீதா ப்ரியாலினி தர்ஷர் (Mrs. Sweeta Priyalini Dharshar) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறுவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்கப்படுத்தினர்.
பாலர் பாடசாலைச் சிறுவர்களின் உடற்பயிற்சி, மனவளர்ச்சி மற்றும் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன. போட்டிகளின் நிறைவில் வெற்றிபெற்ற மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்குச் விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







