முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.
முதலமைச்சர் விஜய் கோட்டைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
இதன் பின்னர் திறந்தவெளி வாகனத்தில் சென்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றியதுடன், சுதந்திர தின உரையையும் நிகழ்த்தினார்.
இந்நிலையில், சுதந்திர தின நிகழ்வில் நடிகை திரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.
மேலும், முதலமைச்சர் விஜயின் பெற்றோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நிலையில், திரிஷாவுடன் அவர்கள் ஒரே வரிசையில் அமர்ந்திருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்னர் இடம்பெறும் முதல் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வு என்பதால், இந்த நிகழ்வு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.









