அவசர நிலைமைகளின் போது உடனடி உதவியைப் பெறுவதற்காக முக்கியமான அவசர மற்றும் உதவி தொலைபேசி இலக்கங்களை பொதுமக்கள் தங்களிடம் வைத்திருக்குமாறு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய, பொதுமக்கள் பின்வரும் முக்கிய தொலைபேசி இலக்கங்களை தங்களது கைபேசிகளில் சேமித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
119 – பொலிஸ் அவசர சேவை
1984 – போதைப்பொருள் ஒழிப்பு அவசர தொலைபேசி
109 – பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பணியக உதவி இலக்கம்
1929 – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய சிறுவர் உதவி இலக்கம்
அவசரச் சம்பவங்கள், போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக அறிவிப்பதற்கு இந்த தொலைபேசி சேவைகள் முக்கியமானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, அவசரத் தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தாமதமின்றி உரிய உதவியைப் பெற்றுக்கொள்ளும் வகையில், இந்த இலக்கங்களை பொதுமக்கள் தங்களது கைபேசிகளில் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.







