Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்

யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்–2” போராட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள், திங்கட்கிழமை (17.08.2026), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நான்கு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதி நாளில், பெருமளவான பொதுமக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தரப்பினரும் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி நாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் பொது நூலகப் பகுதியில் இருந்து ஆரம்பமான பேரணி, நகரின் முக்கிய வீதிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு, நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.நா. பிரதிநிதிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“நீதியின் ஓலம்–2” போராட்டம், தமிழினப் படுகொலை தொடர்பில் சர்வதேச நீதியை வலியுறுத்தும் தொடர்ச்சியான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டதாக தாயகச் செயலணி முன்னதாக அறிவித்திருந்தது.

முக்கிய கோரிக்கைகள்

  • செம்மணி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்துதல்
  • மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல்
  • சர்வதேச சமூகமும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை
  • காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி மற்றும் உண்மையை உறுதி செய்தல்
  • நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்
    செம்மணியின் மண்ணில் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionsrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்
செய்திகள்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

August 18, 2026
கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது
செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

August 18, 2026
ஈரோஸ் பிரபா ,சுமந்திரன், ஹக்கீம், ஆதம்பாவா ஆகியோரை சாடிய அர்ச்சுனா!
காணொளிகள்

ஈரோஸ் பிரபா ,சுமந்திரன், ஹக்கீம், ஆதம்பாவா ஆகியோரை சாடிய அர்ச்சுனா!

August 18, 2026
இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!
அரசியல்

இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!

August 18, 2026
கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்

August 18, 2026
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

August 18, 2026
Next Post
கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.