‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் ஆகஸ்ட் மாத நிதியுதவி இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இம்மாத நிதியுதவி இரண்டு கட்டங்களாக பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இதன்படி, மொத்தம் 9,99,502 குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளதுடன், இதற்காக 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 2,12,955 குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்கவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.








