வாரணாசி, ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட இந்திய நகரங்களின் படித்துறைகளில் மாலை நேரத்தில் தீப ஒளியுடன் நடைபெறும் பிரம்மாண்டமான கங்கா ஆரத்தியைப் போன்றதொரு ஆன்மீக நிகழ்வு முதன்முறையாக லண்டனில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 13, 2026 அன்று லண்டன் கிரீன்விச்சில் அமைந்துள்ள புகழ்பெற்ற Old Royal Naval College வளாகத்தில், தேம்ஸ் நதிக்கரையில் இந்த சிறப்பு கங்கா ஆரத்தி நிகழ்வு நடைபெறவுள்ளது.
மாலை 7.15 மணிக்கு Royal Steps பகுதியில் தீபங்கள் ஏற்றப்பட்டு, மந்திர உச்சாடனைகள் மற்றும் பக்தி இசையுடன் ஆரத்தி நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
கங்கை மற்றும் தேம்ஸ் நதிகளுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார இணைப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாசார விழாவாக நடைபெறும் நிகழ்வு
கங்கா ஆரத்தியைத் தொடர்ந்து இந்திய உணவு, இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வை Chinmaya Mission UK மற்றும் Totally Thames ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
பொதுமக்கள் அனைவரும் இலவசமாக கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நிகழ்வில் பங்கேற்க முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.








