கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ரொட்டி, பரோட்டா மற்றும் பல்வேறு சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை உயர்வினால் உணவகங்களுக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை உயர்வைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை நுகர்வோர் மத்தியில் மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.








