இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை டிப்போவிற்கு அருகாமையில் அமைந்துள்ள கன ரக களஞ்சியசாலையில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தானது இன்று(29) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்குடா அனர்த்த சேவைப்பிரிவின் முயற்சியினாலும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினரின் உதவியுடனும் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து பாரிய அனர்த்தங்களின்றி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.










