திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (5) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 357 கிராம் 830 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கிண்ணியா, அல் அக்ஸா வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிண்ணியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








