இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் பயணித்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ளது.
நேற்று (5) இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இந்திய இழுவைப் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்ததாகவும், அவர்கள் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை அவசர மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.








