நடப்பு ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை இலங்கையில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 88,088 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (5) வரையிலான தரவுகளின்படி, டெங்கு காய்ச்சலால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் 2,739 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனுக்குடன் அகற்றி தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.








