Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய ரீதியில் அதிக 5S தரச் சான்றிதழினை பெற்ற மாவட்டமாக மட்டக்களப்பு!

தேசிய ரீதியில் அதிக 5S தரச் சான்றிதழினை பெற்ற மாவட்டமாக மட்டக்களப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தேசிய ரீதியில் அதிக 5S தரச் சான்றிதழினை பெற்ற மாவட்டமாக
மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.டீ.அரங்க குணரெட்ண தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட 5S தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நேற்று (06) திகதி மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வானது அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் அவர்களது நெறிப்படுத்தலில் உற்பத்தித்திறன் இணைப்பாளர் எஸ்.புவனேந்திரன் அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.டீ.அரங்க குணரெட்ணம் கலந்து சிறப்பித்ததுடன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், பிரதேச செயலாளர்கள் மற்றும் 5S தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனத்தலைவர்கள் உள்ளிட்டோர்
நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

5S தரச்சான்றிதழ் பெற்ற பின்னர் நிறுவனங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், சேவை நாடி வருபவர்களுக்கு சிறந்த சேவையை எவ்வாறு வழங்குவது, 5S தரச் சான்றிதழின் நோக்கம் என்பவை தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், இதன்போது 46 அரச நிறுவனங்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் சுகாதர துறை சார்ந்து 38 நிறுவனங்களும், 2 பிரதேச செயலகங்களும், 6 ஏனைய திணைக்களங்களும் இச் சான்றிதழினை பெற்றுள்ளது.

தேசிய ரீதியில் அதிக 5S தரச் சான்றிதழினை பெற்றுக்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர் கட்டணத்தில் தாக்கம் செலுத்தாதது; அமைச்சர் அனுர கருணாதிலக்க
செய்திகள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர் கட்டணத்தில் தாக்கம் செலுத்தாதது; அமைச்சர் அனுர கருணாதிலக்க

June 12, 2025
முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்
செய்திகள்

முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

June 12, 2025
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு
செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

June 12, 2025
சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி வாக்குமூலம்
செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி வாக்குமூலம்

June 12, 2025
அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்பு; குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும் விமானத்தில் இருந்ததாக தகவல்
உலக செய்திகள்

அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்பு; குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும் விமானத்தில் இருந்ததாக தகவல்

June 12, 2025
அகமதாபாத்தில் 242 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து
உலக செய்திகள்

அகமதாபாத்தில் 242 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

June 12, 2025
Next Post
கொள்ளுப்பிட்டி விபத்து; சாரதிக்கு வேதனத்துடன் விடுமுறை!

கொள்ளுப்பிட்டி விபத்து; சாரதிக்கு வேதனத்துடன் விடுமுறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.