Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கில் பூரண ஹர்த்தால்; ரவூப் ஹக்கீமும் ஆதரவு!

வடகிழக்கில் பூரண ஹர்த்தால்; ரவூப் ஹக்கீமும் ஆதரவு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏழு தமிழ்க் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்களின் ஆதரவுடன் அடுத்தவாரம் முன்னெடுக்கப்படவுள்ள வட, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு அளிக்கவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்களை விடுத்து ஏதேச்சதிகாரப் போக்கில் அரசாங்கம் பயணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைய காலத்தில் அரசாங்கம் நீதித்துறையின் சுயாதீனத்தினை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது.

விசேடமாக, நிறைவேற்று அதிகாரமும், சட்டவாக்கத்துறையினதும் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன.

அவ்வாறானதொரு தருணத்தில் தான் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

அவர் தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விதமான நிலைமைகள் நாட்டின் நீதித்துறை மீதான சுயாதீனத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன. நாட்டின் நீதித்துறை கேள்விக்குட்படுவதானது பாரதூரமான விடயமாகும்.

அரசாங்கம், நீதித்துறையை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி அதன்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றமையானது, அதன் ஏதேச்சதிகாரப் போக்கினையை அம்பலப்படுத்தவதாக உள்ளது.

நாடு அவ்விதமான போக்கில் செல்வதற்கு இடமளிக்க முடியாது.

எமது கட்சியின் தீர்மானத்துக்கு மாறாகச் செயற்பட்டவர் மீது கட்சி உரியவாறு நடவடிக்கைகளை முன்னெடுத்து அவரது உறுப்புரிமையிலிருந்து நீக்கியது.

அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குக்கு எதிரான தீர்ப்பு உறுப்புரிமை நீக்கம் சரியாதென அங்கீகரித்துள்ளது.

ஆகவே, குறித்த தீர்ப்பானது, நீதிமன்றத்தின் சுயாதீனத்தினை உறுதிப்படுத்துகின்றது, என்பதோடு பதவிகளுக்காக கட்சித் தீர்மானங்களை மீறிச் செயற்படுகின்றவர்களுக்கு முன்னெச்சரிக்கையாகவும் உள்ளது.

எனினும், நாட்டில் தீர்ப்புக்கள் தாமதமாகுவதற்கு நீதித்துறையின் மீதான அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் காரணமாகி வருகின்றன என்பதற்கு பல உதாரணங்கள் காணப்படுகின்றன.

ஆகவே, நீதிபதியின் வெளியேற்றம் உட்பட நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களை கண்டித்து வடக்கு,கிழக்கு தழுவிய முழு அளவிலான ஹர்த்தாலுக்கு தமிழ்க் கட்சிகள் ஏகோபித்து எடுத்த தீர்மானத்துக்கு வலுச்சேர்ப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தயாராகவுள்ளது.” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

புத்தளத்தில் கணவன் 21 வயது மனைவியைத் தாக்கி கொலை
செய்திகள்

புத்தளத்தில் கணவன் 21 வயது மனைவியைத் தாக்கி கொலை

June 10, 2025
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா தொற்று
செய்திகள்

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா தொற்று

June 10, 2025
இஸ்ரேலின் அணுசக்தி இரகசியங்கள் ஈரானின் கைகளில்?
உலக செய்திகள்

இஸ்ரேலின் அணுசக்தி இரகசியங்கள் ஈரானின் கைகளில்?

June 10, 2025
அமெரிக்காவில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்
உலக செய்திகள்

அமெரிக்காவில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்

June 10, 2025
ஜனாதிபதி இன்று ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்
செய்திகள்

ஜனாதிபதி இன்று ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

June 10, 2025
போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை
செய்திகள்

போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை

June 10, 2025
Next Post
தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் வெடிவிபத்து;13 பேர் மரணம்!

தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் வெடிவிபத்து;13 பேர் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.