Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 188 பேரிடம் பண மோசடி; மட்டக்களப்பில் சம்பவம்!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 188 பேரிடம் பண மோசடி; மட்டக்களப்பில் சம்பவம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தாய்லாந்து, டென்மார்க், மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி கொக்கட்டிச்சோலை பகுதியில் மோசடியில் ஈடுபட்ட மூவர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை முன்னெடுத்து வருகின்ற நிலையில், வெளிநாடு செல்வதற்கு பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள், மட்டக்களப்பு காட்டுக்கந்தோர் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பணத்தினை பெற்றுத் தருமாறு கோரி இன்று 20 ஒன்று கூடியிருந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட நிறுவனம், 100 வீதம் நம்பிக்கை என கூறி தாய்லாந்து, டென்மார்க் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் அனுப்புகின்றோம் என 188 நபர்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளனர்.

தாய்லாந்திற்கு ஒருவருக்கு 450,000/- ரூபா என 22 நபர்களிடமும், டென்மார்க்கிற்கு ஒருவருக்கு 550,000/- ரூபா என 20 நபர்களிடமும், துபாய்க்கு ஒருவருக்கு 350,000/- ரூபா என 146 நபர்களிடமும் மொத்தமாக 7 கோடியே 20 இலட்சம் ரூபாய் (72,100,000) பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை வெளிநாடு அனுப்புவதாக கூறி 42 நபர்களை கொழும்பிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு, முகவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை துபாய் நாட்டிற்கு தப்பி சென்றதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினர் தங்களுக்கு ஏற்பட்ட இந்த மோசடி நிலையினை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனை அடுத்து இன்றைய தினம் குறித்த மூன்று முகவர்களும் மட்டக்களப்பு பொலிஸாரிடம் சணடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மூன்று முகவர்களிடமும் தாங்கள் வழங்கிய பணத்தினை பெற்று தருமாறு கோரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
செய்திகள்

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

June 10, 2025
திருமண பந்தத்தில் இணைந்த தனது மகளுக்கு 100 பூனைக்குட்டிகளை வரதட்சணையாக வழங்கிய பெற்றோர்
உலக செய்திகள்

திருமண பந்தத்தில் இணைந்த தனது மகளுக்கு 100 பூனைக்குட்டிகளை வரதட்சணையாக வழங்கிய பெற்றோர்

June 10, 2025
சிலருக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது; சாடும் சுமந்திரன்
அரசியல்

சிலருக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது; சாடும் சுமந்திரன்

June 10, 2025
ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு
அரசியல்

ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு

June 10, 2025
மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

June 10, 2025
திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்
செய்திகள்

திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்

June 10, 2025
Next Post
காசாவில் தேவாலயம் மீது தாக்குதல்!

காசாவில் தேவாலயம் மீது தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.