கொழும்பு மாநகரில் வாகன தரிப்பிட பணியாளர்கள் வாகன உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் பணம் வசூலிப்பதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை, டெண்டர் முறையின்படி, வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூலிக்க தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வாகனம் நிறுத்தும் நேரத்தைப் பொறுத்து ஒவ்வொரு வாகனப் பிரிவிலிருந்தும் வசூலிக்கப்படும் தொகை மாறுபடும், மேலும் வாகனம் நிறுத்தப்பட்ட நேரத்தை முறையாகக் குறிக்கும் சீட்டு வழங்குவது கட்டாயமாகும்.
ஆனால், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வாகனங்களை நிறுத்தும் நேரத்தையும், கட்டணம் வசூலிக்கும் நேரத்தையும் மாற்றி, வாகன உரிமையாளர்களிடம் பணம் பறிப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








