Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி மரணம்; இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவிப்பு!

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி மரணம்; இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான அகமது சியாம் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்
என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இவர், 1,000 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்புபடை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் அமைப்பின் முக்கிய மூத்த தளபதிகளில் ஒருவரான
அகமது சியாம் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இவர், ராண்டிசி மருத்துவமனையில் நோயாளிகள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக சிறைப்பிடித்திருந்தார். காசா மக்கள் தெற்கு நோக்கி வெளியேற விடாமல் தடுத்ததில் அகமது சியாமுக்கு முக்கியபங்கு உண்டு.

மேலும், சுரங்கப் பாதையில் பயங்கரமான ஆயுதங்களையும் அவர் மறைத்து வைத்திருந்தார்.
அகமது சியாம் ஹமாஸின் நாசர்ரத்வான் கம்பெனி படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டு வந்தவர். காசாவில் பொதுமக்களை மனிதக்கேட யங்களாகப் பயன்படுத்தி வந்த அகமது சியாமின் ரகசிய இருப்பிடம் குறித்துஷின் பெட் மற்றும் இராணுவபுலனாய்வு இயக்குநரகம் அளித்த உளவு தகவல்களின் அடிப்படையில் கிவாடி பிரிகேட் படையினரின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இஸ்ரேல் பாதுகாப்பு படைஅகமது சியாம் மீது தெரிவித்த குற்றச்சாட்டுக ளுக்கு ஹமாஸ் அமைப்பு
மறுப்பு தெரிவித்துள்ளது.கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ்படைகள் திடீரென இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தி 1,000 இற்கும் மேற்பட்டோரை கொன்றது.இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் உள்ளிட்ட 11 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இதுவரை
கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதிகளாக விளங்கிய அலி காதி, முயதாஸ் ஈத், ஜாகாரியா அபு மாமர், ஜோத் அபு ஷ்மலா, பெலால் அல்காத்ரா, மெராட் அபு மெராட் உள்ளிட்டவர்களும் அடங்குகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவோம் என உறுதி
செய்திகள்

ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவோம் என உறுதி

June 18, 2025
மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய சாரதி கைது
செய்திகள்

மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய சாரதி கைது

June 18, 2025
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மீதான நிதி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மீதான நிதி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

June 18, 2025
45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் நடந்து சென்று சாதனை படைக்க முயற்சி
செய்திகள்

45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் நடந்து சென்று சாதனை படைக்க முயற்சி

June 18, 2025
ஜனாதிபதி செயலகத்தில் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு
அரசியல்

ஜனாதிபதி செயலகத்தில் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு

June 17, 2025
ஈரானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தற்காலிகமாக வெளியேற்றம்
உலக செய்திகள்

ஈரானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தற்காலிகமாக வெளியேற்றம்

June 17, 2025
Next Post
இந்திய மந்திரியிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

இந்திய மந்திரியிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.