Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அன்று சஜித் செய்ததை இன்று ரணில் செய்கிறார்!

அன்று சஜித் செய்ததை இன்று ரணில் செய்கிறார்!

2 years ago
in அரசியல், சிறப்பு கட்டுரைகள்

நாடு ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நோக்கி நகர்கின்றது. ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவாரென்பதில் சந்தேகமில்லை. ரணிலின் கடந்த காலம் எதுவாக இருந்தாலும்கூட இன்றைய நிலையில், ரணில் விக்கிரமசிங்க தொடர்பான அபிப்பிராயங்கள் மாற்றமடைந்திருக்கின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில், ஐக்கிய தேசியக் கட்சியை முற்றிலுமாக இல்லாவிட்டாலும் கணிசமானளவுக்கு பலப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படலாம். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தமது கட்சியை உடைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியிருக்கின்றார். இதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஏற்படுமென்று சஜித் பிரேமதாஸ அச்சப்படுவது தெளிவாகின்றது.

சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்ததன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தி உருவாகியது. சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தது நாட்டு மக்களின் நன்மைக்காகவல்ல. தனது தந்தைபோல் தானும் ஜனாதிபதியாக வேண்டுமென்னும் ஆசையினால்தான் அவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறினார். இதேபோன்று, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறினர். ரணிலுடன் இருந்தால் தாங்கள் தோல்வியடைந்து விடுவொமென்னும் அச்சத்தினாலேயே அவர்கள் அனைவரும் வெளியேறினர்.

இந்தப் பின்புலத்தில் நோக்கினால், முன்னர் ரணிலின் பக்கமாக இருந்தால் தோற்றுவிடுவோமென்று அஞ்சியவர்கள் தற்போது, ரணிலுடன் இணைந்தால் தங்களுக்கு நன்மையென்று கருதினால் – சஜித் பிரேமதாஸவை விட்டு வெளியேறுவதற்குத் தயங்கமாட்டார்கள். ஏனெனில், இங்கு எந்தவொரு கூட்டும் -எந்தவொரு உடைவும் நாட்டு மக்களின் நன்மை கருதி முன்னெடுக்கப்படுவதில்லை.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் வெளியேறினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பொதுவாகவே தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு கட்சியிலிருந்து பிறிதொரு கட்சிக்கு செல்வது சாதாரணமானதொரு விடயமாகும். அதனை சிங்கள மக்களும் பெரிதுபடுத்துவதில்லை. இதேபோன்றுதான் முஸ்லிம்கள் மத்தியிலும். ஆனால், தமிழ் அரசியல் சூழலில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. கட்சி மாறுபவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவை பெறுவது சற்றுக் கடினமானது. எனினும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரால் வெற்றிபெற முடிந்தது. அதிலும் மொட்டு சின்னத்தில். இது தமிழ்த் தேசிய அரசியலுக்கானதோர் எச்சரிக்கையாகவும் இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக, ரணில் விக்கிரமசிங்க தன்னை பலப்படுத்த வேண்டியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தால், நிச்சயம் அவர் அதனைச் செய்துதான் ஆக வேண்டும். தற்போதைய சூழலில், ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்துக் களமிறங்கக் கூடியவர்களின் வாக்குகளை பெறக்கூடிய வல்லமையுடன் இருப்பவர்களென்றால் சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸநாயக்க ஆகிய இருவரே முதன்மையானவர்கள். இவ்வாறானதொரு சூழலில், ஐக்கிய தேசியக் கட்சியை கட்டமைப்பு சார்ந்து பலப்படுத்த வேண்டிய தேவையுண்டு.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை அல்லது ரணிலை நோக்கி பலரும் அணி சேர்கின்றனர் – என்றவாறான, அரசியல் தோற்றப்பாட்டையும் காண்பிக்க வேண்டிய தேவையுண்டு. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் வெளியிலிருக்கும் பலரையும் தன்னை நோக்கி வருவதற்கான வியூகங்களை வகுக்க வேண்டிய அவசியத்தை ரணிலால் தவிர்க்க முடியாதுதான். ஆனால், சஜித் தன்னை பலமாக உணர்ந்தால் கட்சியை உடைக்க முற்படுவதாக அச்சப்பட வேண்டியதில்லை. சஜித்தின் அச்சம் அவரின் தலைமைத்துவ தகுதியின்மையின் விளைவா?

தொடர்புடையசெய்திகள்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்
அரசியல்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்

May 17, 2025
தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி
அரசியல்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி

May 16, 2025
பிரதமர் மீதான தேர்தல் குற்றச்சாட்டு தொடர்பில் எங்களால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு
அரசியல்

பிரதமர் மீதான தேர்தல் குற்றச்சாட்டு தொடர்பில் எங்களால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு

May 16, 2025
அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அரசியல்

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

May 15, 2025
கொழும்பு மாநகரசபை யாருக்கு?- ரில்வின் சில்வா எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை
அரசியல்

கொழும்பு மாநகரசபை யாருக்கு?- ரில்வின் சில்வா எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை

May 13, 2025
40 உள்ளுராட்சி சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்- சுதந்திரக் கட்சி
அரசியல்

40 உள்ளுராட்சி சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்- சுதந்திரக் கட்சி

May 13, 2025
Next Post
மகாவலி திட்டத்தினால் தமிழருக்கு மேலும் ஒரு பெருத்த அடி; 10 இலட்சம் காணிகளில் சிங்கள குடியேற்றங்கள்!

மகாவலி திட்டத்தினால் தமிழருக்கு மேலும் ஒரு பெருத்த அடி; 10 இலட்சம் காணிகளில் சிங்கள குடியேற்றங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.