Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு திருச்செந்தூர் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு!

மட்டு திருச்செந்தூர் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. நேற்றையதினம் கந்தசஸ்டி கும்பம் சொரிதலுடன் நிறைவுபெற்றது.

மட்டக்களப்பு,ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு நேற்றுமுன்தினம் மாலை சிறப்பாக நடைபெற்றது. ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்த சஸ்டி விரதம் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமானது.

முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கந்தசஸ்டி விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்று வந்தன. ஐந்து தினங்கள் பக்தர்கள் விரதமிருந்து கந்தசஸ்டி விரதம் அனுஸ்டித்ததுடன் தினமும் ஆலயத்தில் கந்தபுராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.

சூரசம்ஹாரத்திற்கான வேல் கல்லடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் பெற்றுக்கொண்டு வேல்படையானது ஆலயத்தினை ஊர்வலமாக வந்தடைந்தது. தமிழர்களின் கலாசார பண்பாட்டு இசைவாத்தியங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும்போது நடைபெற்ற நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சூரன்போர் நடாத்தப்பட்டது.

ஆலயத்தின் முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பூதப்படை சூழ முருகப்பெருமான் ஊர்வலமாக சென்று சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் ஆலயத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
நேற்று காலை கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாள் நிகழ்வாக கும்பம்சொரியும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஆறு தினங்களும் விரதம் இருந்தவர்கள் நேற்றைய தினம் தமது வழிபாடுகளில் ஈடுபட்டு தமது விரதத்தினை நிறைவு செய்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கந்தரோடையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
செய்திகள்

கந்தரோடையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

June 16, 2025
புதிய வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்குவதில் இரண்டு மாதம் தாமதம்
செய்திகள்

புதிய வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்குவதில் இரண்டு மாதம் தாமதம்

June 16, 2025
ஆறு பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

ஆறு பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 16, 2025
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்
செய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்

June 16, 2025
காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்
செய்திகள்

காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்

June 16, 2025
வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு
செய்திகள்

வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு

June 16, 2025
Next Post
திரிஷா பற்றிய மன்சூர் அலி கான் பேச்சு; திரையுலக பிரபலங்கள் கண்டனம்!

திரிஷா பற்றிய மன்சூர் அலி கான் பேச்சு; திரையுலக பிரபலங்கள் கண்டனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.