Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் முற்றாக தோல்வியே; சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு!

நிறைவேற்று அதிகார முறைமை; சுமந்திரனின் கருத்தை நிராகரித்தார் ஜனாதிபதி!

3 years ago
in செய்திகள்

சிறிலங்கா அதிபரின் நிறைவேற்று அதிகார முறையை இல்லாது செய்வது தொடர்பான எந்தவொரு ஒப்பந்தத்திலும் தாம் கையெழுத்திடவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபரின் நிறைவேற்று அதிகார முறையை இல்லாது செய்வதற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒப்பந்தத்தில் தாம் கைச்சாத்திட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா அதிபர் அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதி என அண்மையில் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரத்துடன் நியமிக்கப்படும் அதிபருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்தப் பேரவை நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நிறைவேற்று அதிகார முறையை இல்லாது செய்வதற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒப்பந்தத்தில் நான் கைச்சாத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், நான் ஒன்றை கூற விரும்புகிறேன்.

என்னிடம் எந்தவொரு அமைப்பும் இது தொடர்பில் பேசவில்லை. எந்தவொரு சங்கமும் என்னை முன்னிலையாகுமாறு கோரவுமில்லை.

எதிர்க்கட்சியை தவிர வேறு யாருக்கும் இந்த விடயம் தெரியாது. நான் தமிழ் கட்சிகளிடமும் இது தொடர்பில் வினவினேன். அவர்களும் தெரியாது எனக் கூறினார்கள்.

பின்னர் இதன் பிரதியொன்றை நான் பெற்றுக் கொண்டேன். எனினும், அதில் கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை. சில கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரம் இதில் கைச்சாத்திட்டிருந்தனர்.

எனக்கும் இதுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டங்கள் மூலம் பல பிரச்சனைகள் ஏற்பட்டன.

முன்னாள் அதிபர் பதவி நீக்கப்பட்டதுடன், அதிபர் செயலகம் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அத்துடன், அவர்கள் நாடாளுமன்றத்தையும் கைப்பற்ற முயன்றார்கள். நாடாளுமன்றத்தை பாதுகாக்க முடியாவிட்டால் நாம் அனைவரும் வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

இதனாலேயே, நான் நாடாளுமன்றத்தை பாதுகாக்குமாறு சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவிட்டேன்.

இதையடுத்து, காலிமுகத்திடல் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் முன்னிலையாகியிருந்தனர்.

இவ்வாறு முன்னிலையானவர்கள் உண்மையான நிலவரம் தொடர்பில் ஆராயாது முன்னிலையானார்கள். இதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சட்டத்தரணிகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்” – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
வீதிக்கு கீழாகவும் மனித எச்சங்கள்; கொக்குதொடுவாய் தொடர்பில் விஷேட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்த கருத்து!

வீதிக்கு கீழாகவும் மனித எச்சங்கள்; கொக்குதொடுவாய் தொடர்பில் விஷேட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்த கருத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.