எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரித்து சில வீதிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி இப்பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து மக்கள் சுதந்திரமாக தமது பணிகளை மேற்கொள்ளக்கூடிய நாட்டை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.