Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரவூப் ஹக்கீம் மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்; சபையில் சந்திரகாந்தன் குற்றச்சாட்டு!

ரவூப் ஹக்கீம் மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்; சபையில் சந்திரகாந்தன் குற்றச்சாட்டு!

3 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மதத்தின் பெயரால் அரசியலை நடத்துபவர் என்ற குற்றச்சாட்டினை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வந்திருந்தார்.

நேற்றைய பாராளுமன்ற விவாதத்தின்போதே இக்குற்றசாட்டினை முன்வைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் உரையாற்றும்போது, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் அதற்கு வெளியிலும் பணியாற்றும் அரச அதிகாரிகள் நிர்வாக முறைகேடாய் நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். உதாரணமாக ரிதி தென்ன, ஜெயந்தியாய, காரமுன போன்ற கிராம சேவக பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட்டு கோறளைபற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைத்த அறிக்கை வந்த பிற்பாடும் அதனை வர்த்தமானியில் வெளிவருவதற்கு தடை விதித்துக்கொண்டும் நடக்க விடாமல் தடுத்து கொண்டும் அந்த பிரதேசங்களை கோறளை பற்று தெற்கு , கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகங்களூடாக நிர்வகிக்க முயலுகின்ற நிலை காணப்படுகின்றது என தெரிவித்திருந்தார். மேலும் ஒரு கிராம சேவக பிரிவிற்கு இரண்டு கிராம சேவகர்கள் பணியாற்றுகின்ற நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தியாகவெட்டுவான் பிரதேச மக்கள் ஒரு மைல் தூரத்திலுள்ள கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ளகூடிய சூழல் இருந்தும் வேண்டுமென்றே 30, 40 கிலோமீற்றர் தொலைவில் இருக்கின்ற கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்கு சென்று தங்களது சேவைகளை பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் வேண்டுமென்றே நிர்வாக பயங்கரவாதம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இவரது கருத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார், ரவூப் ஹக்கீமின் அரசியல் உருவாக்கத்தின் பின்னர் தான் இன மத ரீதியிலான பிரதேச பிரிவுகள் கல்வி வலய பிரிவுகள் உருவாக்கம் பெற்றன. சமூகங்கள் பிளவு படுவதற்கு இவரும் ஒரு காரணம் என்றார். தொன்மையான கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பகுதியில் புனாணை கிழக்கு முக்கியமான பிரதேசம். அதில் மகாவலிக்கு ஒதுக்கப்பட்ட காணிகளும் வர்த்தமானியில் வெளிவந்த வனஇலாகா பிரதேசங்களும் உள்ள பகுதியில் காரமுனை என்ற தனியொரு கிராம சேவக பகுதியை தரவேண்டுமாம் என கேட்கிறார். இவர் மத ரீதியிலான அரசியலை செய்ய பார்க்கிறார். இதற்கு தீர்வுகாண முற்பட்டால் எல்லா இடங்களிலும் மதத்தின் பெயரால் பிரதேசங்களை துண்டாக்க வேண்டிய நிலை ஏற்படும். நாடு தற்போது இருக்கும் நிலையைவிட வேறுறொரு திசைக்கு மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் என சுட்டிக்காட்டினார்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நரித்தந்திரங்களை மக்கள் சில சமயங்களில் மறந்து விடுகின்றனர்-இரா.சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நரித்தந்திரங்களை மக்கள் சில சமயங்களில் மறந்து விடுகின்றனர்-இரா.சாணக்கியன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.