Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி சிறுவனின் மரண விவகாரம்; சினிமா பாணியில் காய் நகர்த்திய திட்டம் அம்பலம்!

காத்தான்குடி சிறுவனின் மரண விவகாரம்; சினிமா பாணியில் காய் நகர்த்திய திட்டம் அம்பலம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மௌலவி அடிக்கடி தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு, அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என சிசிரிவி தொழிநுட்பவியலாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினமன்று இரவு 7 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் சிசிரிவி தொழிநுட்பவியலாளரான எனக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து எல்லாவற்றையும் வன்பொருளில் (HARD DISK) இருந்து அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு நான் என்னால் வரமுடியாது என மௌலவியிடம் கூறி விட்டேன். அத்துடன் வன்பொருளில் உள்ளவற்றை ஏன் அழிக்க வேண்டும் என கேட்டதற்கு அவர் ஒன்றுமே சொல்லவில்லை. பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். இரவு 11 மணியளவில் மாணவன் இறந்த பின்னர் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. அந்த வேளை எனது சகோதரர் நாம் சிசிரிவி பரிசோதனை மேற்கொண்ட மத்ரஸாவில் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் குறிப்பிட்டார்.

நான் அவரிடம் அங்கு என்ன செய்தீர்கள் என சகோதரரை கேட்டேன். அப்பாடசாலையில் சிசிரிவி வன்பொருள் காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதுடன் வன்பொருளை அங்கிருந்து அகற்றி செல்லுமாறு பதற்றத்துடன் கூறியுள்ளார். அத்துடன் 1000 ரூபா காசும் கொடுத்து 3 நாளைக்கு பின்னர் வன்பொருளை வந்து பொருத்தி தருமாறும் எனது சகோதரரிடம் மௌலவி கூறி இருக்கிறார்.

அத்துடன் சம்பவம் இடம்பெற்று பதற்றம் நீடித்து இருக்கின்ற நிலையில் மௌலவி அடிக்கடி தொலைபேசி அழைப்பு எடுத்து அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை
செய்திகள்

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை

August 13, 2026
காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!
செய்திகள்

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!

August 13, 2026
மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்
செய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

August 13, 2026
வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!
செய்திகள்

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

August 13, 2026
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!
செய்திகள்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

August 13, 2026
பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!
செய்திகள்

பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!

August 13, 2026
Next Post
காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்பு!

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.