Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!

பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!

59 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரம் உள்ளிட்ட எந்த அதிகாரத்தையும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் வரம்புகளுக்கு உட்பட்டே தமது நிறைவேற்று அதிகாரத்தையும் அரசாங்கத்திடம் உள்ள ஏனைய அதிகாரங்களையும் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் அதனால் எதிர்காலத்தில் தமக்கும் பதவியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்படலாம் என முன்வைக்கப்பட்ட சவால் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

தாம் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியலுக்கு வரவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலையிலும் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மாற்றத்தையும் சவால்களை எதிர்கொள்ளாமல் ஏற்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தச் சவால்களின் காரணமாக தமது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!
செய்திகள்

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

August 13, 2026
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!
செய்திகள்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

August 13, 2026
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து
செய்திகள்

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து

August 13, 2026
சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி
செய்திகள்

சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி

August 13, 2026
முஸ்லீம் பெண் தாதியர்கள் ஆடை விவகாரம்!; எம்.பி ஹிஸ்புல்லாஹ் கூறுவது என்ன?
காணொளிகள்

முஸ்லீம் பெண் தாதியர்கள் ஆடை விவகாரம்!; எம்.பி ஹிஸ்புல்லாஹ் கூறுவது என்ன?

August 13, 2026
சூடுபிடிக்கும் முஸ்லீம் கலாசார ஆடை விவகாரம்; சுகுணன் வைத்தியரை போட்டுத்தாக்கிய அர்ச்சுனா
காணொளிகள்

சூடுபிடிக்கும் முஸ்லீம் கலாசார ஆடை விவகாரம்; சுகுணன் வைத்தியரை போட்டுத்தாக்கிய அர்ச்சுனா

August 13, 2026
Next Post
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.